search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலை அணிவித்து மரியாதை"

    • காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து காதிகிராப்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சப்-கலெக்டர் பானு, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ அறிக்கை
    • கழக நிர்வாகிகள் முன்னோடிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது

    இதையொட்டி வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள அண்ணா சிலைகளுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ அவைத்தலைவர் முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் பா. கார்த்திகேயன் எம்.எல்.ஏ, டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி, அமுலு விஜியன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் நாளை காலை 9 மணி அளவில் காட்பாடி யிலும், 9-30 மணி அளவில் வேலூரிலும், 10 மணி அளவில் கே.வி.குப்பத்திலும், 10-30 மணி அளவில் குடியாத்தம் நகரிலும், 11 மணியளவில் அணைக்கட்டிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    எனவே மாநகர, ஒன்றிய, நகர பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர் நிர்வாகிகள், மாநில அணிகளின் துணை அமைப்பாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பகுதி மற்றும் பேரூர் அணிகளின் நிர்வாகிகள் வட்ட, வார்டு, ஊராட்சி கழக நிர்வாகிகள் முன்னோடிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி ‌கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.
    • தி.மு.க.வினர் கலைஞர் அறிவலாயத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி,

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. தருமபுரி நகரசெயலாளர் நாட்டான் மாது தலைமையில் ராஜகோபால் கவுண்டர் பூங்காவிலிருந்து தொடங்கிய அமைதி பேரணி புறநகர் பஸ் நிலையம் கடைவீதி வழியாக வந்து 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் கலைஞர் அறிவலாயத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர்அணி துணை செயலாளர் தரும செல்வன், மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாணவர் அணி அமைப்பாளர் பெரியண்ணண், தடங்கம் இளைய சங்கர், மாவட்ட தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கி–ணைப்பாளர் கவுதம் உள்பட பகுதி செயாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • நகர செயலாளராக நவாப் மீண்டும் தேர்ந்தெ டுக்கப்பட்டதையொட்டி, அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள்.
    • 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளராக நவாப் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு நகர தி.மு.க. செயலாளர் நவாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பெங்களூர் சாலையில் தி.மு. க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    முன்னதாக நகர செயலாளராக நவாப் மீண்டும் தேர்ந்தெ டுக்கப்பட்டதையொட்டி, அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். மேலும், அவருக்கு நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவினை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், அமீர்சுஹேல் உள்ளிட்ட வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் செயலாளர்கள், அமைப்பாளர்கள், தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×